ரிஷாட், அசாத்சாலி ஆகியோருக்கு எதிராக நேற்றும் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஷாலி ஆகியோருக்கெதிராக நேற்றைய தினம் பிவிதுறு ஹெலஉருமய கட்சி உட்பட மேலும் இரண்டு அமைப்புக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளை தாக்கல் செய்தன.

கொழும்பு கோட்டையிலுள்ள பொலிஸ் தலைமையகத்திலே இந்த முறைப்பாடுகள் நேற்று

தாக்கல் செய்யப்பட்டன. பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில, சிங்கள ஜாதிக அமைப்பின் பிரதிநிதி டெத் ப்ரியசாத் ஆகியோர் நேற்றுக் காலை மேற்படி முறைப்பாடுகளை முன்வைத்ததுடன் ‘சுரகிமு ஸ்ரீலங்கா’ அமைப்பின் தலைவர் பாகியன்கல ஆனந்த சாகர தேரர் நேற்று மதியம் தமது முறைப்பாட்டையும் முன்வைத்துள்ளார். மேலும் சங்க சம்மேளனமும் நேற்று ரிஷாதுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்தது.

நேற்று மாலை நான்கு மணியுடன் முறைப்பாடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நிறைவுற்றமையும் குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை