இ.போ.சபை பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் நண்பகல் வரை இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் பலாங்கொடை பகுதியில் சேவையில் ஈடுபட்ட போதிலும் நண்பகலின் பின்னர் சேவையில் ஈடுபடவில்லை. பலாங்கொடை இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் நுழைவாயில் மூடப்பட்டு அதில் சுவரொட்டிகள் தொங்கவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

இதன்காரணமாக பலாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தனர். பஸ் வண்டிகள் இன்மையால் மாணவர்கள் நடந்து செல்வதை காணமுடிந்தது.​

ஹற்றன் நகரில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமை போல் இடம்பெற்றது.

நாடளாவியரீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும் ஹற்றன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களும் சேவையில் ஈடுபட்டிருந்தன.

பலாங்கொடை தினகரன் நிருபர், நோட்டன்பிரிட்ஜ் நிருபர்

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை