அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலை மெய்வல்லுனர் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளிலிருந்து கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டச் செயலக மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூடீன் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் பிரதேசங்களிலுள்ள 19 பாடசாலைகளிலிருந்து மொத்தம் 59 மெய்வல்லுனர்கள் முகாமில் கலந்து கொண்டு நன்மையடைந்தனர். அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மத்துல்லாஹ்வின் பணிப்பின்பேரில், அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் இப்பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தார்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா போட்டி நிகழ்வுகள் எதிர்வரும் ஜூலை 24 முதல் 28ம் திகதி வரை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.எம்.அஸ்மி, ஏ.எல். அஜ்மல், ஐ.எல்.எம். பாயிஸ், ஆர். நௌஷாட் ஆகியோருடன் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை