காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதோடு, நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்  பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல்  02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களினதும்சில இடங்களில் 100 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்சில இடங்களில் 75 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக, மத்திய மலைநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 40 -50 கிலோமீற்றர்  வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த்து.

எனவே, மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

Wed, 06/05/2019 - 07:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை