கசோக்கி கொலையில் சவூதி இளவரசருக்கு தொடர்பு: ஐ.நா

பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில், சவூதி இளவரசருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர் மீது ஐ.நா சபை விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி, கடந்த ஆண்டு, இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்கு சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் சவூதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சவூதி அரசு அதனை மறுத்து வந்தது.

இந்நிலையில், கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் காலாமார்ட், சவூதி அதிகாரிகள் முன்னதாகவே திட்டமிட்டு மிருகத்தனமாக கசோக்கியை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெறவில்லை என குறிப்பிட்ட அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் கசோக்கி கொலையில் தொடர்புள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் ஐ.நா சபை சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை