முடிவுக்கு வந்தது ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டம்

தீர்வின்றேல் வியாழன்தோறும் போராட்டத்தில் குதிக்க முஸ்தீபு

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த 48மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நள்ளிரவு 12மணியுடன் முடிவுக்கு வந்தது.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள், அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளாதுபோனால், ஒவ்வொரு வியாழக்கிழமை நள்ளிரவு 12மணிமுதல் 24மணித்தியாலம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சம்பளம், கொடுப்பனவு, சலுகைள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இவர்களது பிரதான கோரிக்கையாகவுள்ளது.

Sun, 06/23/2019 - 14:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை