கோபத்தை தூண்டியிருக்கும் குழந்தை, தந்தையின் மரணம்

அமெரிக்காவுக்கு செல்லும் முயற்சியில் நீரில் மூழ்கி உயிரிழந்த எல்சல்வடோர் குடியேறி மற்றும் அவரது இரண்டு வயது மகளின் புகைப்படம் கோபத்தைத் தூண்டியுள்ளது. புகலிடக் கோரிக்கையின் ஆபத்தை காண்பிப்பதாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

ரியோ கிரனேட் ஆற்றின் மூலம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவை அடைய முயன்றபோதே இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இருபத்தி ஐந்து வயதான ஒஸ்கார் மார்டினஸ் தனது 21 வயது மனைவி மற்றும் மகளுடன் கடந்த ஞாயிறன்று ஆற்றைக் கடந்து மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

எனினும் நீர்மட்டம் அதிகரித்திருந்த ஆற்றில் இவர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் தந்தையும் மகளும் உயிரிழந்திருப்பதோடு தாய் உயிர் தப்பியுள்ளார்.

இவர்களின் உடல்கள் கடந்த திங்களன்று கரையொதிங்கு உள்ளன.

இளம் தந்தை மற்றும் குழந்தையின் உடல் கரையோரம் இருக்கும் புகைப்படம் எல்சல்வடோர் மற்றும் மெக்சிகோ மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை