ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்ட வரவேற்பு
இந்தியப் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் 8 ஆம் திகதி மாலைதீவு செல்லும் இந்தியப் பிரதமர் அடுத்த நாளான 9 ஆம் திகதி அங்கிருந்து திரும்பும் வழியில் கொழும்பில் தரித்துச் செல்வார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்திய பிரதமர் இலங்கை வருவதாக தெரிய வருகிறது.
எதிர்வரும் 9 ஆம் திகதி பகல் இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இந்திய – இலங்கை விவகாரங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து தீவிரவாத எதிர்ப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
from tkn