குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி; 7 பேர் பாதிப்பு

நாவலப்பிட்டி வெஸ்டோல் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 07 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவு வெஸ்டோல் தோட்டத்தை சேர்ந்த 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ராஜன் என்பவரே நேற்றுமுன்தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது குளவிகள் கொட்டியுள்ளதுடன், பாதிப்படைந்த 07 பேரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே இடையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனையோர் நாவலப்பிட்டி வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டு ஐவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

சடலம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்வதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பொகவந்தலாவ லெட்சுமி மேல்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 06 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். நேற்று முன்தினம் மதியம் குளவி கொட்டுக்கு இலக்காகி இவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை