75 என் சி டின்களுடன் ஒருவர் கைது

பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட 75 என்.சி (புகையிலைதூள்) டின்களுடன் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் போதை பொருளை ஒழிப்போம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த என்.சி டின்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகநபர் புகையிலை தூள் அடைக்கபட்ட என்.சி டின்களை தோட்டமக்களுக்கு 250 ரூபாவிற்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சந்தேக நபர் நேற்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை