திருகோணமலை,தம்பலகாமம பிரதான நீர்க்குழாயில் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் 48 மணி நேரத்துக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. .
திருகோணமலை மாவட்டத்தில்திருகோணமலை நகர் பகுதிகள், தம்பலகாமம், கிண்ணியா, மற்றும் குச்சவெளி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என்பதோடு, நீர்ப் பாவனையாளர்கள் நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பாவிக்குமாறும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் அலுவலகம்அறிவுறுத்தியுள்ளது.
(திருமலை மாவட்ட விசேட நிருபர்)
Sat, 06/08/2019 - 09:35
from tkn