31 ஆவது இளைஞர் விளையாட்டு விழா ஒட்டுசுட்டான் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரநடவடிக்கைகள் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31 ஆவது தேசிய விளையாட்டு விழா இம்முறை சிறப்பாக இடம்பெற இருக்கின்றது

அந்த வகையில் 31 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட விளையாட்டு விழாக்களின் உடைய பெருவிளையாட்டுக்களில் கயிறிழுத்தல் மற்றும் கிரிக்கட் போட்டிகள் கடந்த (17) ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

அந்த வகையில் நடைபெற்று முடிந்தபோட்டிகளில் பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகபிரிவு அணி முதலாமிடத்தையும் பெற்றிருக்கின்றது.

ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகபிரிவு அணி முதலாமிடத்தையும் பெற்றிருக்கின்றது.

அதேபோன்று ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு அணியும் முதலாம் இடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவு அணியும் பெற்றுக்கொண்டிருக்கிறது.

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவு அணியும் முதலாம் இடத்தினை கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு அணியும் பெற்றுக்கொண்டிருக்கிறது.

மாங்குளம் குரூப் நிருபர்

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை