வடக்கு, கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கான நியமனம் இம்மாதம் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலறி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கிழக்குமாகான தொண்டராசிரியகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்த நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தொண்டராசிரியர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகள் தற்போது கல்வி அமைச்சில் இடம்பெற்றுவருகிறன.
இதனடிப்படையில் தெரிவுசெய்யப்படும் தொண்டராசிரியர்களுக்கு இம்மாதம் 30 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வர்.
முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர்
from tkn