களனி பல்கலைக்கழகத்தின் 3 பீடங்களை திறக்க தீர்மானம்

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களை எதிர்வரும் 3 ஆம் திகதி திறப்பதற்கு, பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் தீர்மானம் எடுத்துள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம்,  தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகிய பீடங்களை திறப்பதற்கு களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள்  தீர்மானம் எடுத்துள்ளதாக, அப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பீடங்களும் தற்காலிமாக நேற்று முன்தினம் (30) மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
 
Sun, 06/02/2019 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை