25 பெண்கள் மீது பலாத்காரம்: வர்த்தகருக்கு மரண தண்டனை

சீனாவின் ஹினான் மாநிலத்தில் 25 பதின்ம வயதுப் பெண்களை பலாத்காரம் செய்த வர்த்தகர் ஒருவர் மீது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜாவ் ஜியோங் என்னும் 49 வயது ஆடவர், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக குற்றங்காணப்பட்டுள்ளார்.

பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 14 பெண்கள் 14 வயதுக்குக் குறைவானவர்களாவர். ஆடவருக்கு உதவிய 3 பேருக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது.

பலாத்காரம் தொடர்பாக 2017ஆம் ஆண்டு தகவல்கள் வெளியாயின. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சீனாவில் பலாத்காரம் உள்ளிட்ட 40 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

Fri, 06/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை