மன்னாரில் 126.5 கி.கி. பீடி இலைகள் மீட்பு

மன்னார் மாவட்டத்தில் 126.5கிலோகிராம் பீடி இலைகள், கடற்படையினரால் இன்று (29) காலை கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார், ஒலுதுடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இப்பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

04 பொதிகளில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இப்பீடி இலைகள் காணப்பட்டதாகவும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், யாழ் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Sat, 06/29/2019 - 14:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை