ஏ -09 வீதியில் வாகனம் தீக்கிரை

வவுனியா, கனகராயன்குளம் ஏ -09வீதியில் பயணித்த சொகுசு வாகனமொன்று நேற்று (08) மாலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக சொகுசு வாகனமே,  ஏ -09வீதியில் கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

எனினும், குறித்த வாகனத்தில் பயணித்த சாரதிக்கும்  மற்றுமொருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதோடு, அவர்கள் வாகனத்திலிருந்து பாதுகாப்பாக இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  அத்தோடு, குறித்த வாகனமானது அரசாங்கத்திற்கு சொந்தமானது என தெரியவருகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர் -கே. வசந்தரூபன்)

Sun, 06/09/2019 - 12:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை