மத அடையாளங்களை பாதுகாக்கும் புதிய சட்டம் உருவாக்க வேண்டும்

இலங்கையர்கள் அனைவரும் ஒரு நாட்டின் அங்கத்தவர்கள் போல் வசிப்பதற்கு உதவும் வகையிலான சட்டக் கட்டமைப்பே இன்றைய நிலையில் அவசியப்படுவதாக ஸ்ரீல. சு. கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்

அவ்வாறான சட்டக் கட்டமைப்பு இருந்தால் தற்போதைய சிக்கல் நிலையில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உருவாக்க முடிந்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் வசிக்கும் அனைத்து சமூகங்களினதும் கலாசார மற்றும் மத அடையாளங்களை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படவேண்டும். நாடு எதிர்நோக்கியுள்ள பாதகமான நிலைக்கு அவ்வாறான ஒரு சட்டம் இல்லாததே காரணமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது கட்சியின் பொதுச் செயலாளர் இதனை கூறினார். எமது தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்கால சந்ததியை அமைதியான ஒரு நாட்டில் வாழச் செய்யவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை