தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வையெட்ட வெற்றி வித்திடட்டும்

மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து

இந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாகவும் நரேந்திர மோடி வெற்றி பெற்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரவித்தார்.

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாரதத்தில் தற்போது நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைப்பதற்கு பாரத மக்களது நம்பிக்கையை பெற்ற தங்களிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய மக்களிற்கு தொடர்ந்து அயராது சேவையாற்றும் தங்களிற்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எமது வாழ்துத்துதல்களை தெரிவித்துகொள்கிறோம். எதிர்வரும் வருடங்களில் தங்களது தலைமைத்துவத்தின் கீழ் பலமைல் கற்களை நீங்களும் இந்திய மக்களும் அடைய நாம் பிரார்த்தனை செய்கிறோம் .

இத் தருணத்தில் இலங்கை மக்களிற்கு விசேடமாக தமிழ் பேசும் மக்களிற்கு தங்களது அரசும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளவிரும்புகிறேன். தொடர்ந்தும் வருங்காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தர தீர்வினை எட்டும் முகமாகவும் மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தினையும் ஸ்திரத்தன்மையினையும் நிலை நாட்டும் முகமாகவும் மிக நெருங்கி செயலாற்ற ஆவலாயுள்ளோம். மீண்டுமொருமுறை தமிழ் பேசும் மக்களின் சார்பில் தங்களது உயரிய பதவியில் நீங்கள் திறம்பட செயலாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை