அமெரிக்கர்களின் எச்சங்களை மீட்பதற்கான முயற்சி நிறுத்தம்

கொரிய போரில் இறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வட கொரியாவில் இருந்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

1950–1953 கொரிய போரில் கொல்லப்பட்ட 50 அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை வட கொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையேயான உறவு மேம்பட்டு வருவதை காட்டும் அறிகுறியாக இருந்தது.

இந்நிலையில் பென்டகனில் இருந்து புதன்கிழமை வந்த செய்தியில், அண்மையில் இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த உச்சிமாநாடு தோல்வியடைந்ததை அடுத்து வட கொரியாவிடம் இருந்து அமெரிக்க படை வீரர்களின் எச்சங்களை பெறும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரிய போரின்போது கிட்டத்தட்ட 36 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் 7700 பேருக்கும் அதிகமானோர் கணக்கில் வரவில்லை என அமெரிக்கா கூறுகிறது. இதில் 5300 பேர் வட கொரியாவில் காணாமல் போயுள்ளார்கள்.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை