பாடசாலைக்கு மலசலகூடம் அமைப்பு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக்கான மலசல கூட வசதி கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கே நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இவை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

புலம்பெயர் நாட்டவரின் நிதியில் படையினரின் சரீர பங்களிப்பில் குறித்த பாடசாலைக்கான மலசலகூட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ​ெஜனரல் ரவிப்பிரிய கலந்துகொண்டு மாணவர்களிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிநொச்சி குறூப்,பரந்தன் குறூப் நிருபர்கள்

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை