இலங்கையை பலப்படுத்த ஐ.நாவின் முழுக் கட்டமைப்பும் அர்்ப்பணிப்புடன் செயற்பாடு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், இலங்கை அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார். இந்த கடினமான சந்தர்ப்பத்தில் முழு சர்வதேச சமூகமும் இலங்கையுடன் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்து தனிப்பட்டரீதியில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசாங்கத்திற்குத் தனது அனுதாபத்தைத் தெரிவிக்குமாறும், இச் சந்தர்ப்பத்தில் முழு ஐக்கிய நாடுகள் சபைக் கட்டமைப்பும் இலங்கை அரசைப் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்பதை அறியப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தனக்கு அறிவித்துள்ளாரெனவும் பிரதிப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை