மைலோ சம்பியன்ஸ் கப் கால்பந்தாட்ட போட்டி; எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு

இலங்கை பாடசாலைகளுக்கான கால்பந்துசங்கத்தின் ஏற்பாட்டில் 13,000 சிறார்களின் பங்கேற்புடன் உள்நாட்டு U-12 பாடசாலை கால்பந்து கழகங்களுக்கான போட்டி அண்மையில் ஆரம்பமாகின.

இலங்கையின் மிகத் திறமையான எட்டு இளம் கால்பந்தாட்ட வீரர்களின் வாழ்நாளிற்கானதோர் ஒப்பற்ற அனுபவமாக, முதன்முறையாக சீனாவில் நடைபெறும் மைலோ சம்பியன்ஸ் உலக கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வதற்கானதோர் அரிய வாய்ப்பினை பெறவுள்ளனர். FC Barcelona உடன் மீண்டும் கைகோர்ப்பதன் மூலம் மகத்தானதோர் சாதனை மைற்கல்லினை அடைய மைலோ எதிர்பார்க்கின்றது.

இவ்வாறான உலகத்தரமுடைய விளையாட்டுகளில் பற்கேற்பதற்கான வாய்ப்பினை எமது குழந்தைகளுக்கும் வழங்குவதன் மூலம் அவர்களது அபிலாஷைகளை வளர்த்திடவும், சகல துறைகளையும் நன்கறிந்ததேர் நபர்களாக ஊக்குவிப்பதே மைலோவின் நோக்கம்.

 FC Barcelona என்றுமே உயர்வாக கருதிடும் ஐந்து பிரதான அம்சங்களான பணிவு, நோக்கம், முயற்சி, மரியாதை மற்றும் குழுப்பணி ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு, மைலோ மற்றும் FC Barcelona நான்கு ஆண்டுகளுக்கானதோர் சர்வதேச அளவிலான கூட்டமைப்பாக ஆரோக்கியமானதோர் வாழ்க்கை முறை மற்றும் சிறார்களுக்கான உடலியல் பயிற்சி செயற்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

நாம் ஒன்றாக இணைந்து பல விளையாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வடிவமைத்து, எமது சிறார்களை பங்கேற்க ஊக்குவித்து வருவதோடு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பாடசாலை விளையாட்டுக்களை அபிவிருத்தியும் செய்துவந்துள்ளோம்.

 மேலும் இவ்வாறானதோர் சர்வதேச ஒப்பந்தத்துடன் இலங்கையின் கால்பந்து விளையாட்டினை கட்டியெழுப்பி எமது இளம் நட்சத்திரங்களையும் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லுமோர் முயற்சியே.

“மைலோ சம்பியன்ஸ் கப்” போட்டிக்காக நாடளாவிய ரீதியல் U-12 கால்பந்து போட்டிகள், கல்வி அமைச்சின் ஆதரவுடன் இலங்கையின் பாடசாலை கால்பந்து சங்கத்தினால் நடாத்தப்படுகிறது.

 போட்டிகளில் பங்கேற்க 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறார்கள் உட்பட சிறுமிகளும் தகுதிபெறுவதோடு, 265 பெண் அணிகள் மற்றும் 822 ஆண் அணிகள் உள்ளடங்கலாக 13,044 இளம் வீர வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கவுள்ளமை விசேடம்சமாகும்.

போட்டியில் இவர்களது திறன்கள் மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு முகாமிற்கான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், மைலோ இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு இளம் வீரர்களை நிபுணக்குழு தெரிவுசெய்திடும்.

சீனாவில் நடைபெறவிருக்கும் “மைலோ சம்பியன்ஸ் கப்” போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தற்காக தெரிவாகும் எட்டு இளம் வீரர்களும் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பொலம்பியா, சிலி.

 ஜமைக்கா, ரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற நாட்டு வீரர்களுடன் பேட்டியிட வேண்டும் என்பதோடு, எட்டு வீரர்களை கொண்ட ஒவ்வொரு அணியிலும் ஒரு வீராங்கனை உள்ளடங்கலாக 5 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதோடு பத்து நிமிடங்கள் போட்டி நடைபெறும். இப்போட்டிகள் 9 நாட்கள்வரை நடைபெறுவதுடன் FC Barcelona நடாத்தும் பயிற்சி முகாமும் இதில் உள்ளடங்கும் – The FC Barcelona Barca Academy (சொக்கர் ஸ்கூல்)

இந்நிகழ்ச்சித்திட்டம் முழுதும் மைலோ இளம்வீரர்களின் மத்தியில் அணியாக செயற்படுவதற்கானதோர் ஆற்றலை கட்டியெழுப்பிப்பிட முழுநோக்காக செயற்படவுள்ளதுடன் அணியாக செயற்படுவதின் முக்கியத்துவத்தை மெய்ப்பிக்க, மைலோ FC Barcelona உடன் இணைந்து #TEAMMAKESME எனும் இப்புதியதோர் முயற்சியின் கருப்பொருளின் கீழ், உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை ஒரு குழுவாகசெயற்பட தட்டியெழுப்பிடுமோர் ஒப்பற்ற நோக்கினையும் கொண்டுள்ளது.

Tue, 05/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை