அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்போர் அறிவிக்க காலஅவகாசம்

அனுமதிப்பத்திரமின்றியோ அல்லது சட்டவிரோதமான முறையிலோ வெடிபொருட்களை தம்வசம் வைத்திருப்போர், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிக்க முடியும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அனுமதிப்பத்திரமின்றியோ அல்லது சட்டவிரோதமான முறையிலோ வெடிபொருட்களை தம்வசம் வைத்திருப்போர், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (11) காலை 6 மணி முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 3 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Sun, 05/12/2019 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை