விசேட பிரமுகர்கள் பயணிப்பதற்காக வீதிகளை மூடுவதை தவிர்க்க வேண்டும்

பிரமுகர்களின் வாகன போக்குவரத்துக்காக மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையில் எக்காரணம் கொண்டும் வீதிகளை மூடக் கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், பிரமுகர்களின் வாகன போக்குவரத்துக்காக வீதிகள் மூடப்படுவதனால் மக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதற்கமைய பிரமுகர்களின் பாதுகாப்புத் துறையினருக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் பிரமுகர்களின் வாகனங்களை செல்ல அனுமதிக்குமாறும் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Thu, 05/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை