திட்டமிட்டபடி பரீட்சைகள் அனைத்தும் நடத்தப்படும்

பிற்போடப்பட மாட்டாது

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலையைக் காரணம் காட்டி பரீட்சைகள் பிற்போடப்பட மாட்டாது என்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என சகல பரீட்சைகளும் திட்டமிடப்பட்டவாறு நடத்தப்படும் எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பரீட்சைகளைப் பிற்போடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இரண்டாம் தவணைப் பரீட்சையை உரிய காலத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வழமைபோன்று பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டியது அவர்களின் கடமையும் பொறுப்புமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை