மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 மருந்து வகைகளின் விலைகள் மீண்டும் நேற்றுமுன்தினம் நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எல்பென்டசோல் 400 மி.கிராமின் விலை 36.04 ரூபாவாகவும், எமொக்ஸின் க்லவுஸிலிக் ஹசிட் 156 மி.கிராம் 345.35 ரூபாவாகவும், எஸ்பிரீத் 75 மி.கிராம் 3.60 ரூபாவாகவும் ரையும், எஸ்பிரீத் 100 மி.கிராம் 6.37 ரூபாவாகவும், பெக்லோமெதசோன் 100 மி.கிராம் 609.61 ரூபாவாகவும் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோன்றே ஏனைய மருந்து வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன

Fri, 05/17/2019 - 14:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை