இங்கிலாந்து தலைவர் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐசிசி தடை

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மெதுவாக பந்து வீசியதால், இங்கிலாந்து அணி தலைவர் மோர்கனுக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்றது. முதலில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 358 ஓட்டங்கள் குவித்தது.

பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் போது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர். இதனை போட்டி நடுவர் சுட்டிக்காட்டி தலைவர் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தார். அத்துடன் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சக வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

மோர்கன் தலைமையில் கடந்த பெப்ரவரி மாதம் 22-ம் திகதி மேற்கிந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இதேபோன்று குறிப்பிட்ட நேரத்திற்குள் சில ஓவர்கள் குறைவாக வீசியிருந்தனர்.

ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இப்படி நடந்தால் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும். அதனடிப்படையில் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நாட்டிங்காமில் நடைபெறும் 4-வது போட்டியில் மோர்கன் விளையாடமாட்டார்.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை