வத்தளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

வத்தளை, ஹுனுப்பிட்டிய பகுதியில்  கட்டளைiயை மீறி பயணித்த 2வாகனங்களின் மீது கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,  ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹுனுப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள கடற்படையினரின் சோதனைச் சாவடியில் குறித்த இரு வாகனங்களையும் கடற்படையினர்  இடைநிறுத்த முற்பட்டபோது,  கடற்படையினரின்  கட்டளையை மீறி பயணித்த அவ்விரு வாகனங்களின் மீதும் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இன்று (11) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

Sat, 05/11/2019 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை