ஈஸ்டர் தினக் குண்டுத்தாக்குதல்; வெடிபொருள் பற்றி விசேட ஆய்வு

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனையடுத்த குண்டு வெடிப்புக்களுக்காக பயங்கரவாதக் குழுக்களால் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மேற்படி விசாரணைகளுக்காக குண்டுவெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ. வெலியங்ஸ தெரிவித்துள்ளார்.   இதற்கிணங்க குண்டுவெடிப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பில் இந்த வாரத்துக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

எல்.ரி.ரி.ஈ அமைப்பு​ ரீ என் ரீ/ சீ போ மற்றும் ஆர். டீ. எக்ஸ் உள்ளிட்ட வெடி பொருட்களை பயன்படுத்திய போதிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் தொடர்பில் பரப்பப் படும் பல்வேறு வதந்திகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பான அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்திடமும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம்  

Wed, 05/15/2019 - 09:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை