தாய்லாந்தில் நடைபெற்ற கரப்பந்தாட்டப்போட்டியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அணிக்கு இரண்டாமிடம்

சிவில் பாதுகாப்பு திணைக்கள கரப்பந்தாட்ட அணி 2018ம் ஆண்டு நடைபெற்ற அரச சேவைகள் கரப்பந்தாட்டப் போட்டியில் பீ. குழுவில் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றது. அனைத்து அரச சேவைகள் போட்டித்தொடரில் இரண்டாம் இடத்தையும் அவ்வணி பெற்றுக்கொண்டது.

இவ்வெற்றிகளைப் பெற்ற சிவில் பாதுகாப்பு திணைக்கள கரப்பந்தாட்ட அணி தாய்லாந்தில் Pathunthani University ல் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் கரப்பந்தாட்ட விளையாட்டு கழக தலைவர் மேஜர் டபிள்யூ. எம். எஸ். ஆர். வீரகோன் பிரதான பயிற்சியாளர் பீ. வை. டீ. வீரசிங்க, உதவி பயிற்சியாளர் எல். ரன்சாகொட உள்ளிட்டோரும் அண்மையில் போட்டிகளில் பங்குபற்றினர்.

மூன்று விளையாட்டு கழகங்களுடன் போட்டியிட்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற சிவில் பாதுகாப்பு திணைக்கள அணி அப்போட்டித் தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்றது.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை