பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது

ஊடகங்களுக்கும் அனுமதி

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது.  

இந்தத் தெரிவுக்குழு அமர்வு பாராளுமன்றக் கட்டடத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகுமென பொது நிர்வாக இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.  

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளில் பங்கேற்க ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளித்துள்ளமை இதுவே முதற்தடவை என்றும் அவர் தெரிவித்தார்.  

தெரிவுக் குழுவின் முதலாம் நாள் விசாரணையான இன்றைய தினம் யாரை விசாரணைக்கு தெரிவுக்குழு அழைத்துள்ளது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், அதற்கான தீர்மானங்களை தெரிவுக்குழுவே மேற்கொள்ளும் என்றும் மேலும் தெரிவித்தார்.   (ஸ)   

(லோரன்ஸ் செல்வநாயகம்)  

Wed, 05/29/2019 - 10:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை