பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து காவிந்த விலகல்

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக சாபாநாயகர் இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உட்பட, குறித்த குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.  ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Fri, 05/24/2019 - 11:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை