வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாடு முழுவதும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.
கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் வெசாக் காலத்தில் அவசியமான உச்ச பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். வெசாக் தினங்களில் கொழும்பு நகரிற்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடிகளை கையாள்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இக்காலப்பகுதியில் சிவில் பொலிஸ் பிரிவுடன் தொடர்புற்று உரிய பிரதேசத்தை உள்ளடக்கியதாக மத அனுஷ்டானங்களை ஒழுங்கு செய்யுமாறு நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
from tkn