பெயர்ப்பலகைகளில் இனிமேல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமே

நாடு முழுவதுமுள்ள அனைத்து வீதிப் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் நேற்று உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் வழங்கியுள்ள இது தொடர்பான ஆலோசனையில் எந்தவொரு வீதிப் பெயர்ப் பலகையும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர்ந்த வேறு எந்த மொழியிலும் காட்சிப்படுத்தப்படக் கூடாதென்றும் தெளிவாக வலியுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thu, 05/23/2019 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை