மேல், மத்தி, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் மற்றும் பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
அத்தோடு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, பலத்த காற்று வீசக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது..
இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
from tkn