இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு இன்று (28) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு பௌத்த மத பீடங்களின் மகா நாயக்கர்களை சந்தித்துள்ளனர்.
இந்நிகழ்வின் போது அஸ்கிரிய பீடத்தின் மகா நாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்ததுடன் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தலைமைத் தேரரை சந்தித்ததுடன் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், கட்சியின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் என கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)
from tkn