இன அடையாளத்தில் உருவான பயங்கரவாதம் இனிப்போதும்

தேசிய ஐக்கியத்துக்கான வழியை தேடும் காலம் உருவாக்கம்

நாட்டில் சிங்கள, தமிழ், இஸ்லாமிய அடைமொழிகளில் உருவான பயங்கரவாதங்கள் இனிப்போதுமெனவும் தேசிய ஐக்கியத்துக்கான வழியை தேடுவதற்கான காலம் இப்போது உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எஸ். டபிள்யூ. ஆர் டி பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம், தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்தியாவில் பல இனங்கள் வாழ்கின்றன. அவர்களுக்குள் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தமது பிரச்சினைகளை மறந்து “நாம் இந்தியர்” என ஒன்றுபடுகின்றனர்.. அதே போன்று இங்கு தமிழர் சிங்களவர்,இஸ்லாமியர் என வாழ்ந்தாலும் “நாம் இலங்கையர்” என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஓமல்பே சோபித தேரர் தலைமையில் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் முன்னெடுப்பில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “தேசிய வழி” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலமாக இலங்கையில் பயங்கரவாதம் ஆரம்பமானது. தனிநபர் பயங்கரவாதமாக ஆரம்பித்த இது, பின்னர் தென்னிலங்கையில் இயக்கங்களாக அறியப்பட்டு, சிங்கள பயங்கரவாதம் என்ற பெயரில் தெற்கில் உருவெடுத்தது. இதன் பின்னர் தமிழ் பயங்கரவாதம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் செயற்பட்ட இப்பயங்கரவாதம் இன்று ஐஎஸ் என்ற சர்வதேச தொடர்புடன் இஸ்லாமிய பயங்கரவாதமாமும் உருவாகியுள்ளது.

இலங்கையில் தோன்றிய அத்தனை பயங்கரவாதங்களுக்கும் சிங்கள, தமிழ், இஸ்லாமிய அடைமொழிகள் இருக்கின்றன. இவற்றுடன் கூடவே இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில், “இவை இனிப் போதும். இப்போது புதிய தேசிய ஐக்கியத்துக்கான வழியை தேடும் காலம் உதயமாகிவிட்டது.

அமைச்சர் ஒருவர், இந்நாடு சிங்கள பெளத்த நாடல்ல என கூறியுள்ளதை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் பெரும் வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கே எனக்கு முன் உரையாற்றிய தேரரும் இதுபற்றிப் பேசினார்.

என்னைக் கேட்டால், சட்டப்படி இது பெளத்த நாடுதான் என்பேன். ஏனென்றால் அப்படித்தானே, இந்த நாட்டின் அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது? நாம் அரைகுறையாக முடித்து வைத்துள்ள, புதிய அரசியலமைப்பு வரைபிலும் கூட இதைப் பெரும் விவாதங்களுக்கு உள்ளாக்கவில்லை என்பதை நண்பர் சுமந்திரன் எம்.பி அறிவார்.

இந்த நாடு இலங்கைதான். ஆகவே நாம் அனைவரும் இலங்கையர்தான். ஆனால், ஏன் நம்மில் ஒரு பிரிவினர் இலங்கையர் என்று கூறுவதைவிட, தம்மை சிங்கள பெளத்தர் என்று வரையறைப் படுத்தி அழைக்க விரும்புகின்றனர் என சிந்திக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர்

 

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை