ஜெர்மனில் பறக்கும் வாகனம் அறிமுகம்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு உதவும், 5 பேர் அமர்ந்து செல்லும் வகையிலான பறக்கும் வாகனத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், வானில் பறந்து செல்லும் வாடகைக் கார் என்று பொருள்படும் ஏர் –டாக்சிகளை, குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இருந்த இடத்தில் இருந்து உயரே எழும்பி, அதேபோன்று கிடைமட்டமாக தரையிறங்கும் ஏர்-டாக்சிகள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில், ஜெர்மனியைச் சேர்ந்த ஏர் –டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் வாகனங்களை 2025ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்துச் சேவைக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் இயங்கி வருகிறது. 5 இருக்கைகளுடன் கூடிய, பேட்டரியில், ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படும் மாதிரி வாகனத்தையும் அந்த நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே, லில்லியம் ஜெட் மணிக்கு 300 கிலோமீற்றர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை