மகளிர் எல்லே போட்டி: கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் வெற்றி

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மகளிர் எல்லே தொடரில் ஏறாவூர்ப்பற்று சார்பாக பங்குபற்றிய செங்கலடி- கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவானது.

இப்போட்டி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைத்தனத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டி ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச இளைஞர் கழகங்களிடையே நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஏறாவூர்ப்பற்று சார்பில் பங்குபற்றிய செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழக அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச அணி வழங்கப்பட்ட 30 பந்துகளில் 5 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெத்தாடிய கோல்ட் ஸ்டார் அணி 21 பந்துவீச்சில் 6 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

(ஏறாவூர் குறூப் நிருபர்)

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை