கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று முதல் திறப்பு

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மத அனுஷ்டானங்களுக்காக இன்று முதல்  திறக்கப்படும் என,  கடற்படையினர்  தெரிவித்தனர். 

தேவாலயத்தில் காலை 7.00 மணியிலிருந்து இரவு 7.00 மணி வரை பக்தர்கள் தமது மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், திருப்பலி பூஜை ஒப்புக் கொடுக்கப்படமாட்டாது எனவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த தேவாலயத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளையும் கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, தேவாலயம் அமைந்துள்ள பகுதியை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர். 

Tue, 05/07/2019 - 10:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை