யாழ்பாணம், தீவகம், பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று (19) பிற்பகல் 5.00 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த மூவரும், காரில் மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
from tkn