மட்ரிட் பகிரங்க டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் பெடரர்

மட்ரிட் பகிரங்க டென்னிஸில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கயல் மான்பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் பிரான்ஸ் வீரரான கயல் மான்பில்சை எதிர்கொண்டார். இதில், 6-0, 4-6, 7-6 (3) என்ற கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது அவரது 1200வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 05/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை