யாழ். பண்ணை கார் விபத்தில் ஒருபர் பலி,இருவர் படுகாயம்

யாழ். பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் படுகாய மடைந்துள்ளனர்.

மண்டைதீவு சந்திக்கருகில் நேற்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் மூவரும் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துள்ளானது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை