அமித் வீரசிங்கவுக்கு நாளை வரை விளக்கமறியல்

மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்கவுக்கு நாளை (29) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

இன்று (28) கொழும்பு மேலதிக நீதவான் சாலினி பெரேராவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில்  தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க,  கடந்த 14ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டு இன்று வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்த்து.

கலக சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால்விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினராலேயே அவர்  கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான சாராம்சத்தை  நாளைய தினம் (29) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் விசேட விசாரணை பிரிவுக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

Tue, 05/28/2019 - 15:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை