குரு முதல்வர் அடிகளார் ரூபன்
நடந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களை தொடர்ந்தும் மெருகூட்டிப் பேசிப் பேசி நோயாளிகளாக மாற வேண்டிய தேவைப்பாடு இல்லை என தென்னிந்திய திருச்சபையின் கிழக்குப் பிராந்திய குரு முதல்வர் அடிகளார் ஏ.எஸ். ரூபன் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைந்த சர்வமத சமாதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் சனிக்கிழமை 25இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, திட்ட அலுவலர் கிங்ஸ்லி ராஜசிங்கம், உட்பட மட்டக்களப்பு மாவட்ட சமாதானப் பேரவை உறுப்பினர்களும், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சமயங்களின் சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சமாதானத்தை உருவாக்குன்ற பாக்கியவான்களுக்கிடையில் துரதிருஷ்டவாதிகள் இருக்க முடியாது.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையில் உள்ள நாங்களும் சமாதானத்துக்கான கதவுகளைத் திறந்து அதற்காகப் பரப்புரை செய்து பாடுபட வேண்டும்.
நடந்து முடிந்த கொடூரமான சம்பவங்களை நினைவூட்டி மெருகூட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் அது மேலும் மேலும் வன்மங்களைத் தூண்டத்தான் வழி கோலும்.
இஸ்லாம்,பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம் போன்ற இன்னும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மதங்களை நான் கற்பிக்கும் ஒருவர் என்ற வகையில் இஸ்லாத்தைப் பற்றியும் அல்குர் ஆனைப் பற்றியும் எனக்குச் சிறந்த புரிதல் இருக்கின்றது.
இஸ்லாத்தின் பார்வையில் ஷைத்தான்களாக வாழ்வோரை எக்காரணம் கொண்டும் அடக்க முடியாது என்றார்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)
from tkn