ஓடுபாதையில் இருந்து சறுக்கி ஆற்றுக்குள் விழுந்த விமானம்

அமெரிக்காவின் போயிங் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கியூபாவின் குவாண்டனமோ விரிகுடாவில் இருந்து புளோரிடா ஜாக்சன்வில்லே விமான நிலையத்தில் தரை இறங்க இந்த விமானம் முயன்றபோது கனமழை பெய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மிகவும் சிரமப்பட்டு ஓடுபாதையில் விமானத்தை இயக்கிய போது, சறுக்கிச் சென்றுள்ளது.

சென்ற வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதை அருகே உள்ள செயிண்ட் ஜோன்ஸ் ஆற்றுக்குள் இறங்கியது. ஆனால் விமானம் மூழ்கும் அளவிற்கு ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை