போனி சூறாவளி இலங்கையிலிருந்து நகரும் சாத்தியம்

மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்காக விருத்தியடைந்த போனி சூறாவளி (Fani), இன்று (03) அதிகாலை 02.30 மணிக்கு வட அகலாங்கு 18.6N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.2E இற்கும் அருகில், யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 1,140 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது வடக்கு - வடகிழக்கு திசையில் இலங்கையிலிருந்து விலகி நகரும்  சாத்தியம் காணப்படுவதோடு,  இதனால் ஏற்படும்  பாதிப்பு படிப்படியாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர்  வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு சப்ரகமுவ, மத்திய, தென், மேல், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையா பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. இப்பகுதிகளின் சில இடங்களில் 100 -150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, பொதுமக்களும் கடலில் பயணிப்போரு  மீனவச் சமூகத்தினரும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Fri, 05/03/2019 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை