வடக்கில் நாளை மௌனாஞ்சலி

வடக்கு ஆளுநர் வேண்டுகோள்

மதஸ்தலங்களில் மணியோசை காலை 8.45க்கு ஆரம்பம்

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாணத்திலுள்ள அனைத்து மதவழிபாட்டுத் தலங்களிலும் நாளை காலை மணியோசையை ஒலிக்கச் செய்யுமாறும் மௌன அஞ்சலியை செலுத்துமாறும்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியை நினைவு கூரும் முகமாக நாளை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்கச் செய்ய வேண்டும். அத்துடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை