பிலியந்தலையில் ஆயுதம், கைக்குண்டுடன் நால்வர் கைது

பிலியந்தலை, கடிகம பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை நேற்று (24) காலை சோதனை செய்ததாகவும், அதிலிருந்து ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டு கைப்பற்றப்பட்டதோடு,  இச்சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று மற்றும் கைக்குண்டொன்று, 2வாள்கள், 200கிலோகிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டன. அத்தோடு, குறித்த காரும் கைப்பற்றப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.  

மொறவக, பாலியகொடை மற்றும் களனி ஆகிய இடங்களை சேர்ந்த 29, 36, 34 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Sat, 05/25/2019 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை